சனி, 23 ஜனவரி, 2016

ரஜினிக்கு மணியார்டர்

ஒஉ
ரஜினிக்கு மணியார்டர் நெல்லை மாவட்டம், திருமலையப்ப புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர், ரஜினிக்கு ரூ. 10 மணியார்டர் அனுப்பியுள்ளார். கூடவே ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பின்போது, தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட பல லட்சம் வாரிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் 10 பைசா கூட கொடுக்காதது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன். இது போன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் ரஜினிக்கு பதிவுத் தபாலுடன் அனுப்பிய கடிதம் கிடைத்ததற்கான அக்னாலஜிமெண்ட் கார்டு ராமநாதனுக்கு கிடைத்தது. ஆனால் மணியார்டர் திரும்ப வந்து விட்டது. மேலும், மணியார்டர் திரும்ப வந்ததற்கான காரணம் அப்படி ஒரு முகவரியே இல்லை என ‘நாட் நோன்’ என்று குறிப்பிட்டுள்ளதாம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பொறுக்கி சிம்பு - அனிருத்திற்கு செருப்பு மாலை - சாணி ஆடி!


பொறுக்கி சிம்பு – அனிருத்திற்கு செருப்பு மாலை – சாணி அடி ! தோழர் அமிர்தா பத்திரிக்கைகளுக்கும் – ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியில், “இந்த சமூத்தையே சீரழிக்கும் விதமாக இவர்கள் இசையமைத்து பாடியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம், மேலும் மழை வெள்ளத்தில் தங்களுடைய வாழ்வையே இழந்து தமிழகம் நிற்கும் சமயத்தில் இப்படி ஒரு ஆபாசமான பாட்டை வெளியிடுவது இவர்களுடைய வக்கிரபுத்தியை காட்டுகிறது, மேலும் மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது. கலை – சினிமா என்பது சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாறாக பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் படங்களையும் பாடல்களையும் வெளியிடும் யாராக இருந்தாலும் எங்களுடைய கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடந்து செய்வோம்” என்று பேசி முடித்தார். (மேலும்) http://www.vinavu.com/2015/12/21/womens-protest-against-simbu-aniruth/

அம்மாவின் மரணதேசம் https://m.youtube.com/#/watch?list=PLgLDAS3c4ME9D429BCcT79VKM1Plp7Ad7&v=l6M7bvYw-VY நன்றி வின்வு இணைதளம்

சனி, 19 டிசம்பர், 2015

எனக்கு என் கொள்கையைவிட உயிர் பெரிதல்ல''


1931 மார்ச் 23, மாலை நேரம். லாகூர் சிறையில் தனிக்கொட்டடி சிறையின் தலைமை வார்டன் சர்தார் சிங் சீக்கியர்களின் புனித நூலான ""குத்தா''வை பகத்சிங்கிடம் நீட்டி ""நான் ஒரு சிறை அதிகாரியாக இதைச் சொல்லவில்லை, உன் தந்தையின் ஸ்தானத்திலிருந்து சொல்கிறேன். இறுதிநேரத்தில் இந்த நூலைப் படித்து கடவுளை நினைத்துக்கொள்'' என்கிறார். ""தந்தையின் ஸ்தானத்தில் என்ன? என் தந்தையே நேரில் வந்து கொடுத்தாலும் இதுபோன்ற மதநூல்களைப் படிக்க என் மனம் ஒப்பாது. இதை நான் செய்தால் சராசரி மனிதரைப் போன்றே சாகும்போது நானும் கொள்கையைக் கைவிட்டு கடவுளிடம் சரணடைந்தேன் என்று மக்கள் எண்ணுவார்கள். எனக்கு என் கொள்கையைவிட உயிர் பெரிதல்ல'' என்கிறார் பகத்சிங். சிறிது நேரம் சென்றது. சிறை அதிகாரிகள் சிலர் தனிக்கொட்டடிக்கு வருகின்றனர். அப்போது பகத்சிங் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். ""தூக்குமேடைக்குச் செல்ல உன்னை தயார் செய்ய வேண்டும்'' என்றனர் அதிகாரிகள். ""ஒரு மாவீரனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் காத்திருங்கள்'' என்கிறார் பகத்சிங். அப்போது அவர் படித்துக்கொண்டிருந்தது லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்' என்ற நூலாகும். நூலைப் படித்து முடித்ததும் ""வாருங்கள் போகலாம்'' என்கிறார் பகத்சிங்.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஆபாசப் பாடல் பாடிய சிம்பு வீட்டை முற்றுகையிட்டு (பெண்கள் விடுதலை முன்னணி) போராட்டம்


சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்! சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி) ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த அமிர்தா கூறும்போது, சிம்பு - அனிருத் கூட்டதாகத் தயாரித்துள்ள தனி ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பீப் சாங் என்ற ஆபாசப் பாடலை தடை செய்ய வேண்டும். இந்தப் பாடலில் பெண்களை போகப் பொருளாகச் சித்தரிக்கும், பெண் உறுப்புகளை அரைச் சொல்லாக பயன்படுத்தும் சொற்கள் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு, இருவரையும் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, பிற்போக்குப் பண்பாட்டுக்கு எதிராக போராடிவரும் பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பு மேற்குறித்த பாடலை தடை செய்ய வேண்டும் எனவும், இசை அமைத்து பாடிய இருவரையும் இதுபோன்ற சீரழிவுக் கலைகயையும், தமிழகம் புறக்கணிக்க வேண்டுமென்றும் குறிப்பாக பெண் விடுதலைக்குப் போராடி வரும் அனைவரையும் ஒன்று திரண்டு பிரச்சாரம் செய்து போராடி அழைக்கின்றோம் என்றார். நன்றி : நக்கீரன், 18/12/2015

இல்லை... இல்லை.. இல்லை.


இல்லை… இல்லை.. இல்லை. காசு இல்லதவனுக்கு கல்வி இல்லை ! கடன் பட்டு படித்தாலும் வேலை இல்லை ! விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை ! விவசாயம் செய்தாலும் விலச்சலுக்குறிய விலை இல்லை ! பணம் இல்லை என்றால் மருத்துவம் இல்லை! அரசு மருத்துவமனையில் போதிய மருந்து இல்லை ! மோத்ததில் இது மக்களுக்கான அரசு இல்லை ! நம்மை ஆளுவதர்கு இந்த அரசுக்கு தகுதி இல்லை……….